பசுவதை

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூரில் ஓடும் சராயன் ஆற்றில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பசுக்களின் சடலங்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மொராதாபாத்: பசுவைக் கொன்று, இனக் கலவரத்தைத் தூண்டவும் உள்ளூர்க் காவல்துறை அதிகாரிக்கு அவப்பெயர் உண்டாக்கவும் முயன்றதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் மாவட்டத் தலைவர் உட்பட நால்வரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.